Anganwqadi Teacher's Nose Chopped-குழந்தைகள் பூ பறித்ததால் ஆசிரியை மூக்கை வெட்டியவர் கைது..!

மூக்கு வெட்டப்பட்ட ஆசிரியையான சுகந்தா மோர் பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆபத்தான நிலையைத் தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-04 06:22 GMT

Anganwqadi Teacher's Nose Chopped,Karnataka News,Nose Chopped,Anganwqadi Teacher,India

அங்கன்வாடி குழந்தைகள் பூ பறித்ததற்காக ஆசிரியையின் மூக்கைத் துண்டித்த 50வயதான கல்யாணி மோர் அன்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அங்கன்வாடி குழந்தைகள் கல்யாணி மோரின் தோட்டத்தில் பூ பறித்த ஆத்திரத்தில் ஆசிரியை சுகந்தா மோர் மூக்கை வெட்டியதாக கூறப்படுகிறது.

ஆசிரியை சுகந்தா மோரே பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டு, உடனடி ஆபத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. அவரைப் பரிசோதித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், காணாமல் போன மூக்கின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டால், அவரது மூக்கைப் புனரமைப்பதற்கான சாத்தியம் உள்ளதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

Anganwqadi Teacher's Nose Chopped

சம்பவம் நடந்த அங்கன்வாடி பாசுர்தே கிராமத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சொந்தமான வாடகை இடத்தில் அமைந்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் இயக்கப்படுகிறது.

நடந்தது என்ன?

ஜனவரி 2 ஆம் தேதி இடைவேளை நேரத்தில் தோட்டத்திற்குச் செல்ல மாணவர்களை ஆசிரியர் அழைத்துச் சென்றார். அங்கு விளையாடிய சில குழந்தைகள் கல்யாணி மோரின் தோட்டத்தில் சில பூக்களைப் பறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளி கையில் அரிவாளுடன் குழந்தைகளை விரட்டியவாறு ஆசிரியை சுகந்தா மோரேயிடம் சண்டை போட்டுள்ளார். பின்னர் அரிவாளால் தாக்கி மூக்கை அறுத்துள்ளார்.

Anganwqadi Teacher's Nose Chopped

ரத்த வெள்ளத்தில் துடித்த சுகந்தாவை பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று ரத்தம் ஏற்றினர். குற்றவாளி கைது செய்யப்பட்டதாக போலீஸ் கமிஷனர் சித்தராமப்பா உறுதி செய்தார். தாக்குதலுக்குப் பிறகு தப்பி ஓடியபோது காகத்தி போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார் என்று அறிக்கை மேலும் கூறியது.

பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், இந்தத் தாக்குதலைக் கண்டித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடும்பத்துக்கும் துறையின் வேலை மற்றும் உதவி வடிவில் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

Anganwqadi Teacher's Nose Chopped

இந்த தாக்குதல் ஆசிரியர் சமூகத்தில் இருந்து வலுவான எதிர்வினையை ஆற்றியுள்ளது. நூற்றுக்கணக்கான அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் தாலுகா தலைமையகத்தில் போராட்டங்களை நடத்தினர். பெலகாவி தாலுகா அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியது.

மேலும் அவர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று கோரியது. பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News