கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பல்வேறு பணிகள்

அனைத்துப் பணிகளுக்கும் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 27.1.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Update: 2022-01-22 04:19 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விபரங்களவான :

1.பணியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர்கள்

காலியிடங்கள்: 2

சம்பளம்: ரூ.21,000

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை/முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குற்றவியல்/கல்வியியல்/ குழந்தை வளர்ச்சி/ உளவியலாளர்/ சமூகப்பணி/ சமூகவியல் பாடங்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தொழில், கல்வி, சமூகநலம், குழந்தை நலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மூன்று வருடம் பணி புரிந்த அனுபவம் வேண்டும்.

2. பணியின் பெயர்: சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.21,000

கல்வித்தகுதி: BL/LLB/சட்டம் படித்திருக்க வேண்டும். குழந்தை நலன்/சமூக நலன்/தொழிலாளர் நலன் மற் றும் சட்ட உதவி சேவை முத லியவற்றில் ஒரு வருடம் கள அனுபவம் இருக்க வேண்டும்.

3.பணியின் பெயர்: ஆற்றுப் படுத்துநர்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.14,000

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை/ முதுநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உளவியல் / சமூகப்பணி/சமூகவியல்களில் வழிகாட்டுதல்/ மருத்துவம்/மனநலம் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

4. பணியின் பெயர்: சமூகப் பணியாளர்கள்

காலியிடங்கள்: 2

சம்பளம்: ரூ.14,000

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை/ முதுநிலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். உளவியல் / சமூகப்பணி / சமூகவியல் / வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

5. பணியின் பெயர்: கணக்காளர்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.14,000

கல்வித்தகுதி: B.Com./M.Com. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏவாவது ஒரு

நிறுவனத்தில் கணக்கு துறையில் இரண்டாண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர்: தகவல்பகுப்பாளர்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.14,000

கல்வித்தகுதி: BA/B.Sc. (புள்ளியியல் மற்றும் கணக்கு)/BCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் தகவல் பகுப்பாளராக இரண்டாண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர்: உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.10,000

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் பயிற்சி, கணினி இயக்குவதில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர்: புறத் தொடர்பு பணியாளர்கள்

காலியிடங்கள்: 2

சம்பளம்: ரூ.8,000

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்துப் பணிகளுக்கும் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப் பூர்வ அறிவிப்பைக் காண : Notification

விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம்  செய்ய : Application

இந்த விண்ணப்பத்தை பூர்த்திச் செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 27.1.2022 தேதிக்குள் கீழ்க் கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, GT GÖST. 156,

சாரதாம்பாள் வீதி, நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி,

விழுப்புரம்-605 401. தொலைபேசி எண்:

04146-290659. dcpuvpm1@gmail.com.

Tags:    

Similar News