பத்தாம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்களுக்கு உத்திரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு பணிகள்

உத்திரகாண்ட் துணை சேவை தேர்வு ஆணையத்தில் 100 காலிப்பணியிடங்களை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 12/03/2022

Update: 2022-03-05 07:42 GMT

உத்திரகாண்ட் மாநிலத்தில், உத்திரகாண்ட் துணை சேவை தேர்வு ஆணையத்தில் கரும்பு மேற்பார்வையாளர், தோட்ட மேற்பார்வையாளர், போன்ற பதவிகளுக்கு 100 காலிப்பணியிடங்களை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தப் பணிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரங்கள் :

பணியிடம் மற்றும் வயது வரம்பு

கரும்பு மேற்பார்வையாளர் - சர்க்கரை தொழில் துறை 21 முதல் 42 வயது வரை.

கார்டன் ஓவர்சீயர் -18 முதல் 42 வயது வரை.

மாநில பால் மேற்பார்வையாளர் - 21 முதல் 42 வயது வரை,

தோட்ட மேற்பார்வையாளர் - 21 முதல் 42 வயது வரை,

உணவு பதப்படுத்துதல் - 21 முதல் 42 ஆண்டுகள்,

சம்பள விபரம் :

கரும்பு மேற்பார்வையாளர்

சர்க்கரைத் தொழில் துறை ரூ.25,500/- முதல் ரூ.81,100/- , கார்டன் ஓவர்சீயர் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை , மாநில பால் மேற்பார்வையாளர் ரூ.25,500/- முதல் ரூ.81,100/வரை, தோட்ட மேற்பார்வையாளர் ரூ.21,700/- முதல் ரூ.69,100/வரை, உணவு பதப்படுத்துதல் ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை கிடைக்கும்.

விண்ணப்பக்கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய் 300 ம், எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளி மற்றும் எக்ஸ் சர்வீஸ் மேன் போன்ற பிரிவினர்களுக்கு ரூபாய் 150 ஆகும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 12/03/2022

மேலும் இந்த வேலைவாய்ப்புத் தொடர்பாக முழுவிபரங்களை அறிய அதிகார பூர்வ இணையத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யுங்கள் .

அதிகார பூர்வ இணையதளம் : sssc.uk.gov.in

Tags:    

Similar News