பி.இ., பி.டெக்., படித்தவர்களுக்கு சென்னை ராணுவ பயிற்சி பள்ளியில் பணிகள்

பி.இ., பி.டெக்., (BE/B.Tech) படித்தவர்களுக்கு சென்னை இந்திய ராணுவ பயிற்சி பள்ளியில் 191 பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-10-17 06:19 GMT

சென்னையில் உள்ள இந்திய ராணுவ "Officers Training Academy-ல் ராணுவ அதிகாரிப் பணிகளுக்கான காலியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Short Service Commission Officers (Tech. & Non-Tech) Exam-2022

மொத்த காலியிடங்கள்: 191

(பாடவாரியான காலியிட விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.)

இதில் இரண்டு இடங்கள் போரில் வீர மரணமடைந்த வீரர்களின் விதவை மனைவி களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளவிகிதம்:  ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். விதவைகளுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

Civil/ Mechanical/ Electrical/ Electronics/ Tele Communication/IT/ Architecture/ Aeronautical/ Avionics/ Computer Science Engineering/ Informa tion Technology/ Satellite Com munication/ Remote Sensing/ Ballistics Engineeing/ NuclearTechnology/ Laser Technology/ Opto Electronics போன்ற பாடப்பிரிவுகள் அல்லது மேற் கண்ட பாடங்களை ஒரு பாடமாக கொண்ட ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பு BE/B Tech. பட்டம் பெற்றிருக்க வேண் டும். BE/B.Tech. படிப்பை முடித்து பட்டம் பெற இருக்கும் இறுதியாண்டு பொறியியல் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

பொறியியல் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் முதல் கட்ட நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார். கள். முதல்கட்ட தேர்வில் Psychological Test, Group Test மற்றும் மருத்துவத்தேர்வு ஆகியவை நடத்தப்படும். இதில் வெற்றி பெற்றவர்கள் 2ம் கட்டமாக பயிற்சிக்கு அழைக்கப்படுவர். சென்னையிலுள்ள ராணுவ அதிகாரி கள் பயிற்சி மையத்தில் வைத்து 49 வாரம் ராணுவ அதிகாரி பணிக்குரிய பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் PG Diploma in Defence Management and Strategic Studies என்னும் பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர். பயிற்சி முடிந்த வுடன் இந்திய ராணுவத்தில் "லெப்டினன்ட்" அதிகாரியாக பணி அமர்த்தப்படுவர். நேர்முகத் தேர்விற்கான அழைப்பு கடிதம் மின் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் மூன்றாம் வகுப்பு A/C ரயில் கட்டணம் வழங் கப்படும். பயிற்சி ஏப்ரல் 2022-ல் ஆரம்பமாகும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.10.2021.

மேலும் கூடுதல் விபரங்ககள் தெரிந்துகொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Tags:    

Similar News