10, 12ம் வகுப்பு படித்தோருக்கு ரூ.11,916 சம்பளத்தில் வேலை

தென்காசி மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் 10, 12ம் வகுப்பு படித்தோருக்கு ரூ.11,916 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-09-12 07:01 GMT

தென்காசி மாவட்டத்தில் குழந்தை நலக் குழுமத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.09.2022க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதவி: கணினி இயக்குபவர்

மொத்த பணியிடங்கள்: 02

கல்வித்தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணிணியில் சான்று

சம்பளம்: மாதம் ரூ.11,916/-

வயது வரம்பு: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு தென்காசி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் செப்டம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.09.2022

மேலும் விபரங்களுக்கு: Click Here

Tags:    

Similar News