சி.எஸ்.ஐ.எப்., பணியில் சேர அழைப்பு

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் சேர, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2022-09-19 16:25 GMT

சி.எஸ்.ஐ.எப்., பணி செய்ய வாய்ப்பு; தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம்,

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (சி.எஸ்.ஐ.எப்) உதவி சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் என 540 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் விரைவாக டைப்பிங் செய்வதற்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25-10-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 26-10-1997-க்கு முன்போ, 25-10-2004 -க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 26-9-2022 முதல் 25-10-2022 வரை விண்ணப்பங்களை இணையதளம் வழியாக சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.cisfrectt.in/ என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News