மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணி: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பணி : மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர். காலிப் பணியிடங்கள் : 16. விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-04-2022.

Update: 2022-04-18 04:17 GMT

தமிழ்நாடு சீர்திருத்த பள்ளிகள் மற்றும் ஒழுக்க கண்காணிப்பு பணிகள் அடங்கிய மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விபரங்கள்:

பணி : மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்

காலிப் பணியிடங்கள் : 16

சம்பளம் : மாதம் ரூ.56,100/- முதல் 2,05,700/- வரை

தகுதி : சமூகவியல் அல்லது சமூகப்பணி அல்லது உளவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01-07-2022 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி மற்றும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழித்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் : நிரந்தர பதிவு கட்டணம் ரூ.100. தேர்வு கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்

விண்ண ப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30-04-2022.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தை பார்வையிடுங்கள். 

Tags:    

Similar News