வேதியியலர் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 5 தேர்வு மையங்களில் நடைபெறுவதாக இருந்ததை இப்போது மாற்றம் செய்துள்ளனர்.

Update: 2022-02-24 02:14 GMT

வேதியியலர் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது : 

தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வேதியியலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு மார்ச் 19ம் தேதி அன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 5 தேர்வு மையங்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற் போது இந்த எழுத்துத்தேர்வு நிர்வாக காரணங்களால் சென்னை மையத்தில் மட்டும் மேற்குறிப்பிட்ட தேதியில் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News