அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்திற்கான முகவர் பணி: டிசம்பர் 12-ல் நேர்காணல்

அஞ்சல் ஆயுள் காப்பீடு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கான நேரடி முகவர்கள் தேர்வுக்கு டிசம்பர் 12-ல் நேர்காணல் உள்ளது.

Update: 2021-11-24 14:44 GMT

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்தியக் கோட்டம் அலுவலகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்குப் புதிய நேரடி முகவர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

இது குறித்த விபரங்கள் :

தேவையான தகுதிகள்

1. கல்வி தகுதி – குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. வயது வரம்பு – 18-லிருந்து 50 வரை

3. பிரிவுகள் – சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள் / முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

4. விரும்பத்தக்க தகுதிகள் – ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப் பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

5. இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்கத் தகுதியில்லை.

6. மேற்கண்ட தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் – வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அணுகவும். நேர்காணலுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப்பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரிமீயம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் மேற்கண்ட தகுதியைப் பெற்றிருப்பின்

எண்.2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 03.12.2021 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Tags:    

Similar News