UPSC - ல் 363 காலியிடங்கள்: முதுநிலை பட்டதாரிகள் Principal பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்

ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து, குறைந்தது 10 வருடங்கள் ஆசிரியராக பணி புரிந்திருக்க வேண்டும்.

Update: 2021-07-24 09:45 GMT

டெல்லி அரசின் கல்வித் துறையில் காலியாக உள்ள Principal பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதன் விபரங்கள் :

மொத்த காலியிடங்கள்: 363

தகுதி:

ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து, குறைந்தது 10 வருடங்கள் ஆசிரியராக பணி புரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

தகுதியானவர்கள் UPSC ஆல் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, விண்ணப்பதாரரின் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் www. upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 29.7.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Tags:    

Similar News