பொன்னேரி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை

பொன்னேரி அருகே குடிபோதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Update: 2024-02-26 08:28 GMT

கொலை செய்யப்பட்ட அஜீத் மற்றும் அவரது உறவினர்கள்.

பொன்னேரி அடுத்த மணலி புதுநகர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலையாளி போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மணலி புதுநகர் அடுத்த விச்சூர் பகுதியை சேர்ந்தவர்  அஜீத் (வயது 22).  அஜீத் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக இவர் மீது வழக்குகள் உள்ளது. மேலும் மணலி புதுநகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது அஜீத்  தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.அஜீத்தும் அதே ஊரை சேர்ந்த ஜீவா என்கிற பகவதி இருவரும் நண்பர்கள். நேற்று மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். சிறிது நேரத்தில் ஜீவாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்ட அஜீத்தை ஜீவா கத்தியால் கழுத்தில் வெட்டியுள்ளார்.

இதில் அஜீத் ரத்தவெள்ளத்தில் சரிந்த நிலையில் ஜீவா மணலி புதுநகர் காவல் நிலையத்தில் சரணடைந்து நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணலி புதுநகர் போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணத்தினால் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News