பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளி அடித்து கொலை

பெரியபாளையம் அருகே வடமதுரை வீட்டில் தனியாக இருந்த கூலிதொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2024-04-17 06:21 GMT

பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்தவரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த வடமதுரை காட்டுக்குக் கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ( வயது 40). கூலித் தொழிலாளி இவருக்கு திருமணமாகி மனைவி ஷியமளா (வயது39) ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் ஜெயபிரகாஷ் அவரது மனைவி ஷியமளா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதமாக தனித்தனியே வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உறவினர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜெயபிரகாஷ் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் அக்கம், பக்கத்தினர் அவரது வீட்டிற்குக்கு சென்று பார்த்த போது அங்கு ஜெயபிரகாஷ் தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக யாரேனும் திட்டமிட்டு ஜெயபிரகாஷை அடித்து கொலை செய்தனரா ? அல்லது வீட்டிற்குள் யாரேனும் பொருட்களை திருட வந்தபோது ஏற்பட்ட மோதலில் அவர் மர்ம நபரால் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா ? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News