நலம்… இன்று இல்லம் திரும்பும் நடிகர் விக்ரம்..!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விக்ரம், நலம் பெற்றார். இன்று டிஸ்சார்ஜ் ஆகி இல்லம் திரும்புவாராம்.

Update: 2022-07-09 05:06 GMT

நடிகர் விக்ரம். 

நடிகர் விக்ரம் இரண்டு மூன்று நாட்களாகவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று (08/07/2022) கொஞ்சம் அசௌகரியாக உணர்ந்ததால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், நடிகர் விக்ரம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. இதுகுறித்து, நடிகர் விக்ரம் தரப்பிலிருந்து, "உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விக்ரமின் சிகிச்சை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சிலர் தவறாகப் புரிந்துகொண்டு விக்ரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக பொய்யான தகவல்களைப் பரப்பிவிட்டனர்.

இரண்டு மூன்று நாட்களாகவே இருந்த காய்ச்சலை அசௌகரியமாக அவர் உண்ர்ந்ததால்தான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டனர், தற்போது பூரண குணமடைந்து வருகிறார். இன்று (09/07/2022) நலமுடன் அவர் வீடு திரும்பிவிடுவார்" என தெரிவித்துள்ளனர்.

பூரண நலம் பெறுங்கள் விக்ரம். மீண்டும் புதிய உற்சாகத்துடன் திரைப்பணியைத் தொடருங்கள்… இன்ஸ்டாநியூசின் வாழ்த்துகள்.

Tags:    

Similar News