ஷிவின் டைட்டில் வின்னரா வரணும்னு நினைத்தேன்: பிக்பாஸ் கதிர் ஓபன் டாக்

பிக்பாஸ் டைட்டிலை ஷிவின் தா வெல்வாரென நினைத்தேன் என பிக்பாஸ் போட்ன்டியாளர் சமீபத்திய நேர்காணலொன்றில் கூறியிருக்கிறார்.

Update: 2023-02-06 13:37 GMT

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற கதிரவன்

விஜய் தொலைக்காட்சியொன்றில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சி 5 சீசனைகளையும் கடந்து 6ஆவது சீசனும் கடந்த மாதம் முடிவடைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கியிருந்தார். மொத்தம் 21 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் விஜேவாக வாழ்க்கையை 2011இல் தொடங்கிய கதிரவனும் போட்டியாளராக இருந்தார். இவர் பிரபல தொலைக்காட்சியொன்றில் தன் இனிமையான பேச்சால் அனைவரையும், குறிப்பாக பெண்களையும் கவர்ந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கென்று இன்னும் அதிகமான ரசிகர் பட்டாளம் அதிகரித்தது, மேலும் இவர் இந்நிகழ்ச்சியில் 100 நாளுக்கு மேலாக விளையாடி வந்தார்.

21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் அசீம், விக்ரமன், மைனா, ஷிவின், கதிரவன், அமுதவாணன் ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர். இதில் யார் பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை ஜெயிக்க போகிறார் என்று ஆவலுடன் இருந்தபோது .இறுதி வரை செல்வார் என மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர், திடீர் டுவிஸ்டாக ரூ.3 லட்சம் தொகையுடன் அந்த பணமூட்டையை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இது அவரது ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது.


பிக்பாஸ் வீட்டில் மோதல் தொடங்கி காதல் வரை அனைத்து சம்பவங்களும் நிகந்தது.

இந்நிலையில், தற்போது ஒரு பேட்டியில் ஷிவின் பற்றி கதிர் கூறியுள்ளார். பேட்டியில், பிக்பாஸ்வெற்றியாளராக யாராக இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தீர்கள்..? என்ற கேள்விக்கு பதிலளித்த கதிரவன், " பிக் பாஸ் வீட்டில் எல்லாருமே நன்றாக தான் விளையாடினார்கள். நான் ஷிவின் தான் வெற்றியாளராக வேண்டும் என்று நினைத்தேன். எனவே ஷிவின் வெற்றிபெற்றிருந்தால் சேர்ந்து கொண்டாடிருக்கலாம்" என கூறியுள்ளார்


ஏன் பணப்பெட்டியுடன் வெளியேறினீர்கள் என்ற கேள்விக்கு, பதிலளிக்கையில் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றது டைட்டிலை ஜெயிக்கிறது இல்ல. பணப்பெட்டி வைத்தால் அதனை எடுத்துக்கொண்டு வெளிய வந்துவிட வேண்டும் என்றும் முன்பே முடிவு செய்து வைத்திருந்தேன்.

நான் நினைத்தது போலவே பணப்பெட்டியை வைத்தார்கள். எனவே பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். நான் வீட்டை விட்டு வெளியேறும் போது என்னை வழியனுப்ப ஜனனி, ஏடிகே தவிர எல்லாரும் மொத்தமாக இருந்தார்கள் அது ரொம்பவே சந்தோசமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News