அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-03-22 07:00 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம், வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம், அருணா தம்பதியரின் மகன் ஏழுமலை (12). இவர், தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அரூர் வட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் சிறுவன் ஏழுமலை வீட்டில் மின்கசிவு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, காலை 7 மணியளவில் வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டிருந்த கம்பி மீது ஈரமான துணிகளை காயவைத்த போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சிறுவன் ஏழுமலை உயிரிழந்தார். இது குறித்து அரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News