அதிமுக சட்டவிதிகளின்படி அமைப்பு தேர்தல் நடத்தப்படும்: ஒ. பன்னீர்செல்வம்

விதிகளின்படி அமைப்பு தேர்தல் முறையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தர்மத்தின்படி நடத்தப்பட்டுள்ளது

Update: 2021-12-08 00:15 GMT

சென்னை விமானநிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

அதிமுக சட்டவிதிகளின் படி அமைப்பு தேர்தல் நடக்கும், நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பவன் நான் என்றார்  ஒருங்கிணைப்பாளர்  ஒ. பன்னீர்செல்வம்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் முன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம்  மேலும் கூறியதாவது: அதிமுக சட்ட விதிகளின்படிதான் அமைப்பு தேர்தல் முறையாக முதற்கட்டமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல், தர்மத்தின்படி நடந்து முடிந்திருக்கிறது.தொடர்ந்து கட்சியின்  அமைப்பு தேர்தல்   நடக்கும். நீதிமன்ற தீர்ப்பை மதிப்பவன் நான். உறுப்பினர் கார்டுகளை உரியவர்களிடம் சேர்க்க வேண்டும் என  கட்சித்தலைமை  அறிவித்துள்ளது என்றார் அவர்.

Tags:    

Similar News