/* */

திருவில்லிபுத்தூரில் தாய் மகனுடன் குளத்தி மூழ்கி உயிரிழப்பு

திருவில்லிபுத்தூரில் குளத்தில் மூழ்கி மாற்றத்திறனாளி மகனுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

திருவில்லிபுத்தூரில் தாய் மகனுடன் குளத்தி மூழ்கி உயிரிழப்பு
X

பைல் படம்

திருவில்லிபுத்தூரில் குளத்தில் மூழ்கி மாற்றத்திறனாளி மகனுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஓட்டமடம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி முத்துமாரி (33). இவர்களது மகன் மாரீஸ்வரன் (8). மாரீஸ்வரன் பிறந்தது முதல் நடக்க முடியாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாவார். சில ஆண்டுகளுக்கு முன்பு மாரியப்பன் இறந்து போனார். கணவர் இறந்த பின்பு, பேரையூர் பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவரை முத்துமாரி மறுமணம் செய்து கொண்டு கோயம்புத்தூரில் வசித்து வந்தார். மாற்றுத்திறனாளியான தனது மகனுக்கு உதவித்தொகை பெறுவதற்கான வாழ்நாள் சான்று பெறுவதற்காக திருவில்லிபுத்தூருக்கு முத்துமாரி தனது மகனுடன் வந்திருந்தார்.

அங்கு உறவினர் வீட்டில் தங்கிய முத்துமாரி, தனது மகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் திருவில்லிபுத்தூரில் உள்ள மடவார்வளாகம் தெப்பக்குளத்தில் மூழ்கி முத்துமாரியும், அவரது மகன் மாரீஸ்வரனும் இறந்த நிலையில் மிதந்தனர். இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள், திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், குளத்தில் மூழ்கி இறந்து கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 Aug 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!