/* */

பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆலை உரிமையாளரின் மகன் கைது

பட்டாசு ஆலையின் உரிமையாளரின் மகன் சிதம்பரத்தை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பட்டாசு ஆலை வெடி விபத்தில்  ஆலை உரிமையாளரின் மகன் கைது
X

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து வழக்கில் ஆலை உரிமையாளரின் மகனை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சிவகாமிபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (57). இவர் சாத்தூர் அருகேயுள்ள கத்தாளம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி, சோலைவிக்னேஷ் (26) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். பட்டாசு ஆலை விபத்து குறித்து அம்மாபட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு ஆலை உரிமையாளர் பெரியகருப்பன், அவரது மகன்கள் ராமச்சந்திரன் (34), சிதம்பரம் (31), மணிகண்டன் (28) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் இவர்களை கைது செய்வதற்காக தீவிரமாக தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் சிதம்பரத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 6 May 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...