காரியாபட்டி அருகே மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

காரியாபட்டி அருகே  மாற்றுத் திறனாளிகளுக்கு   நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்

காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்

காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தில், மாற்றுதிறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் பால்சாமித்தேவரின் 2-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பிரைஸ் அறக்கட்டளை துவக்க நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்து, மறைந்த பாலுச்சாமி தேவரின் திருவுருவப்படத்தையும், அறக்கட்டளையின் பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார்.மதுரை அக்ரி கணேசன், ராஜேந்திரன் தேவர் என்ற ஜெயபெருமாள் நகராட்சி துறையின் நிர்வாகஇயக்குனர் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மேலும், விழாவில் ஏழை மாணவர்களின் கல்வி உதவிதொகை, விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள், பெண்களுக்கு தையல் மிஷின் மாற்று திறனாளிகளுக்கு மூன்றுசக்கர வண்டி ஆகிய உதவிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். நிகழ்ச்சியில், மதுரை எம்.எல்.ஏ தளபதி, திருச்சுழி யூனியன் தலைவர் பொன்னுத்தம்பி, காரியாபட்டி பேரூராட்சித்தலைவர் செந்தில்,திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், போஸ், மாவட்டக் கவுன்சிலர் தங்கதமிழ்வாணன் பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி ஊராட்சி மன்றத் தலைவர் வேப்பங்குளம் ஆதிஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். எஸ். பி .எம் . அறக்கட்டளை நிர்வாகி அழகர்சாமி நன்றி கூறினார்.

Tags

Next Story