/* */

மாநில அளவிலான சிலம்பாட்டம் போட்டி: காரியாபட்டி பள்ளி மாணவர்கள் சாதனை

மாநில அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில், காரியாபட்டி பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர் .

HIGHLIGHTS

மாநில அளவிலான சிலம்பாட்டம் போட்டி: காரியாபட்டி பள்ளி மாணவர்கள் சாதனை
X

மாநில அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில், காரியாபட்டி பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர் .

மாநில அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில், காரியாபட்டி பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர் .

சேலம் மாவட்டம் ஆத்தூர் வசிஷ்ட சிலம்பம் அகாடமி சார்பில் 2வது மாநில அளவிலான நடைபெற்ற சிலம்பாட்டபோட்டி நடைபெற்றது. இ‌தி‌ல், 13 மாவட்டத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் ப‌ங்கு பெற்றனர். இதில், அருப்புக்கோட்டை ஐ.எஸ்.எப். அகாடமி சார்பில் மாணவ, மாணவிகள் 29 பேர் மினி சப் ஜுனியர், சப் ஜுனியர், ஜூனியர் பிரிவில் 4 பிரிவில் பங்கு பெற்று மொத்தம் 85 பதக்கங்கள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் 3 ஆம் இடம் பிடித்தனர். இதில், ஒற்றை கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, வேல் கம்பு வீச்சு, சுருள் வாள் வீச்சு, வாள் வீச்சு, மான் கொம்பு வரிசை, கம்பு சண்டை ஆகிய பிரிவுகளின் கீழ் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர்கள் சங்கர் கணேஷ் நந்த குமார், சிவலிங்கம் ஆகியோர் வாழ்த்தினர்.

Updated On: 23 Jun 2022 8:34 AM GMT

Related News