காரியாபட்டியில் ரெட்டி நலசங்க பொதுக்குழுக் கூட்டம்
சங்க வளர்ச்சி பணிகள், உறுப்பினர்கள் சேர்த்தல், அலுவலகம், திருமண மண்டபம் அமைப்பது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி நடந்த ரெட்டி நலச்சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு சங்க வட்டத்தலைவர் பிசிண்டி ரகுபதி தலைமை வகித்தார்.
மதுரை விருதுநகர் வாழ் சென்னை ரெட்டி சங்க செயலாளர் ராமநாதன், அருப்புக்கோட்டைரெட்டி யார் நலக் அறக்கட்ட ளைத்தலைவர் சந்திரபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் சாய்பாபா வரவேற்றார். கூட்டத்தில், சங்க வளர்ச்சி பணிகள், உறுப்பினர்கள் சேர்த்தல், அலுவலகம், மற்றும் திருமண மண்டபம் அமைப்பது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், தொழிலதிபர்கள் ஆர்.டி.பாபு, பிரபாகரன், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தேவசேனா அருப்புக்கோட்டை ரெட்டியார் அறக்கட்டளை நிர்வாகிகள்வெள்ளய ரெட்டி, சுப்பா ரெட்டியார். திருமங்கலம் சங்கத்தலைவர் சீனிவாசன், தமிழாசிரியர் அழகர்சாமி, பேரூராட்சி கவுன்சிலர் சரஸ்வதி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.