/* */

விருதுநகர்: காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

HIGHLIGHTS

விருதுநகர்: காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம்
X

காரியாப்பட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சித்தலைவர் செந்தில் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரூபி சந்தோசம், செயல் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், பேரூராட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காரியாபட்டி பேரூராட்சியில் கால்நடை வாரச்சந்தை அமைப்பது என்றும், சிறுவர் பூங்கா அமைப்பது, தாமிரபரணி திட்டத்தின் மூலம் கூடுதலாக குழாய் இணைப்பு வழங்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கில் மீண்டும் உரம் தயாரிக்கும் பணி செய்யவும், காரியாபட்டியில் 1.50. கோடி மதிப்பீட்டில் மின்மயானம் அமைப்பது, சந்தை திடல் வணிக வளாக கடைகளை பராமரிப்பு செய்வது, காரியாபட்டி செவல்பட்டியில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் கையகப்படுத்தியுள்ள பேரூராட்சி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுப்பது, மாதந்தோறும் பேரூராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

இக்கூட்டத்தில், கவுன்சிலர்கள் லியாகத் அலி, ராம்தாஸ், முனீஸ்வரி , முகமது முஸ்தபா, சங்கரேஸ்வரன், நாகஜோதி, வசந்தா, செந்தில், தீபா ,சத்தியபாமா, செல்வராஜ், சரஸ்வதி திருக்குமாரி , முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Updated On: 30 April 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  3. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  4. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  5. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  6. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  7. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  8. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  9. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  10. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...