காரியாபட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிரம்பும் கண்மாய்
![காரியாபட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிரம்பும் கண்மாய் காரியாபட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிரம்பும் கண்மாய்](https://www.nativenews.in/h-upload/2021/11/26/1411546-img-20211126-wa0018.webp)
X
காரியாப்பட்டி அருகே கண்மாய் நிரம்பியுள்ளது.
By - N. Ravichandran |26 Nov 2021 2:00 PM IST
மழையின் காரணமாக, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நீர் நிரம்புகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், பல பெரிய கண்மாய்கள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன. அவ்வகையில், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, கரிசல்குளம் கண்மாய், 10 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரம்பி வருகிறது. பல கண்மாய்களில், நீர் மறுகால் போகிறது. இதேபோல், விருதுநகர் மாவட்டத்திலும் பல கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சாத்தூரில் கன மழை பெய்துள்ளதால், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கால்வாய்களில் மழைநீர் பெருக்கெடுத்து செல்கிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu