சிவகாசி பகுதியில் பலத்த மழை: சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீரால் மக்கள் அவதி

Heavy Rain in Sivakasi
X

Heavy Rain in Sivakasi

Heavy Rain in Sivakasi-மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக தமிழகத்தில் 5093 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன

Heavy Rain in Sivakasi-விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் காலையில் இருந்து மேகமூட்டமாக இருந்த நிலையில் கடுமையான வெப்ப நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் இரவு 9 மணியளவில் சாரலாக துவங்கிய மழை சற்று நேரத்தில் பலத்த மழையாக பெய்யத் தொடங்கியது. பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால், சிவகாசி நகர் பகுதியில் உள்ள சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல இடங்களில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மழைநீரில் சாய்ந்து விழுந்து இழுத்துச் செல்லப்பட்டது.

மாரியம்மன் கோவில் பகுதி, புதுரோட்டு தெரு, ஜவுளிக்கடை வீதி, மணி நகர், பழைய நீதிமன்ற சாலை, தெற்கு தெரு, காளியம்மன் கோவில் தெரு, புதுத்தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இரவு நீண்ட நேரம் சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளான சித்துராஜபுரம், சசிநகர், பேர்நாயக்கன்பட்டி, மாரனேரி, விளாம்பட்டி, மாதாங்கோவில்பட்டி, பாறைப்பட்டி, மீனம்பட்டி, சுந்தர்ராஜபுரம், அனுப்பங்குளம், பேராபட்டி, அம்மன் நகர், திருத்தங்கல், செங்கமலப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம் உள்ளிட்ட பல இடங்களிலும் நேற்றிரவு கனமழை பெய்தது.

இதனால் இந்தப்பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. சிவகாசி பகுதியில் பெய்த கனமழை பொதுமக்களுக்கு சற்று சிரமத்தை தந்தாலும், குடிநீர் பிரச்சினை தீரும் என்று மகிழ்ச்சியையும் தந்துள்ளது.மதுரை மாவட்டத்தில், வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மழை பாதிப்புகள் தொடர்பாக தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 138 அழைப்புகளில், 68 அழைப்புகள் மீது நிவாரண நடவடிக்கை:

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக தமிழகத்தில் 5093 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. எந்தெந்தப் பகுதிகளில் மக்களை தங்க வைக்க வேண்டும் என்பதையெல்லாம் அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே முடிவு செய்து வைத்துள்ளனர்.

மழை பாதிப்புகள் தொடர்பாக தமிழகம் முழுவதிலும் இருந்து 138 அழைப்புகள் வந்துள்ளன. 68 அழைப்புகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 70 அழைப்புகளுக்கான பணிகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 38 அழைப்புகள் வந்தன. 25 அழைப்புகளுக்கான பதிலளிக்கப்பட்டு, அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெறுமனே அழைப்புகளுக்கு பதிலளிக்காமல், பணிகள் முடிந்த பின்னரும் சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு, நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறியப்படுகிறது.

மேலும் அனைத்து மாவட்ட நிர்வாகத்துடனும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மிகப்பெரிய பாதிப்பு தற்போது வரை எந்த மாவட்டத்திலும் இல்லை. சென்னையில் மட்டும் சில இடங்களில் தண்ணீர் தேங்கும் பிரச்சினை உள்ளது. குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகள் எல்லாம் முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகிறது என்று அவர் கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story