சதுரகிரி மலை செல்ல நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
X
By - N. Ravichandran |28 March 2022 12:11 PM IST
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் காேவில் அமைந்துள்ளது.
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் காேவில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை, பெளர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து நடைபயணம் மேற்கொண்டு சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பங்குனி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்-1-ந் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை மாலை அனைத்து சிவ ஆலயங்களிலும் பிரதான பூஜைகள் நடைபெறும்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu