விருது நகர் அருகேயுள்ள காரியாபட்டியில் குழந்தைகள் திருவிழா

குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கிய பேரூராட்சித் தலைவர் செந்தில்
காரியாபட்டியில் குழந்தைகள் திருவிழா: மாலை நேர கல்வி மாணவர்கள் பங்கேற்பு :
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், குழந்தைகள் திருவிழா மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஜெகஜீவன்ராம் நகரில், இயங்கிவரும் அம்பேத்கார் மாலை நேர கல்வி மையம் - இன்பம் பவுண்டேசன் சார்பாக குழந்தைகள் திருவிழா நடைபெற்றது.
விழாவுக்கு , பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் பா. அசோக் குமார் , கவுன்சிலர் முனீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தார். இன்பம் பவுண்டேசன் . ஒருங்கிணைப் பாளர் தமிழரசி வரவேற்றார்.
விழாவில், குழந்தைகளின் கரக ஆட்டம், பரதநாட்டியம், மாறுவேட போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்கள், கல்வி உபகரணங்களை பேரூராட்சித் தலைவர் செந்தில் வழங்கினார். கலைநிகழ்ச்சியில், பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில், இன்பம் பவுண்டேசன் நிர்வாகி விஜயகுமார், ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், பசுமை பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம், காரியாபட்டி கிளை நூலகர் ராமமூர்த்தி, திருச்சுழி கிளை பாஸ்கரன், வழக்கறிஞர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன், சரஸ்வதி கல்வி மைய ஆசிரியர் கீர்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்: மேலும், விழாவில் குழந்தைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக கல்வி மைய மாணவர்கள் அனைவரும் இன்பம் பவுண்டேசன் சார்பாக கிளை நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu