காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரூராட்சித் தலைவர் ஆய்வு

காரியாபட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த பேரூராட்சித் தலைவர் செந்தில்
காரியாபட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பேரூராட்சித் தலைவர் செந்தில் ஆய்வு செய்தார்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரூராட்சித் தலைவர்செந்தில், செயல் அலுவலர் ரவிக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் லியாகத் அலி ஆகியோர் பள்ளிக்கு தேவையான குடிநீர்வசதி, கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
பள்ளியில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சித் தலைவர் செந்தில் மாணவிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். இது குறித்து அமைச்சர் தங்கம்தென்னரசுவின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பேரூராட்சித் தலைவர் செந்தில்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu