/* */

அமைச்சரிடம் பள்ளி கட்டிடம் கேட்டு மாணவர்கள் கோரிக்கை

திண்டிவனம் அருகே உள்ள பகுதியைச் சார்ந்த மாணவ மாணவிகள் தங்கள் படிப்பதற்கு பள்ளி கட்டிடம் கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

அமைச்சரிடம்  பள்ளி கட்டிடம் கேட்டு மாணவர்கள் கோரிக்கை
X

அமைச்சரிடம் மனு அளித்த பள்ளி மாணவ, மாணவிகள்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் மோகனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில் தற்போது 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இப்பள்ளியில் ஒரேஒரு வகுப்பறை மட்டும்தான் உள்ளது. அந்த வகுப்பறையும் மிகவும் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. கடந்த மழையின்போது இப்பள்ளி கட்டிடம் மேலும் சேதமடைந்துள்ளதால் மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதனால் பக்கத்து வீட்டில் உள்ள மாட்டுக்கொட்டகைகளிலும், குடியிருப்புகளிலும், வீட்டின் வளாகங்களிலும் அமர்ந்து பாடம் கற்பித்து வருகிறோம்.

புதிய கட்டிடம் வேண்டும் மேலும் இப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் கிடையாது. சமையல் கூடம் இல்லாததால் சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியில் சமையல் செய்து தருகின்றனர். இதுதவிர விளையாட்டு மைதானம், கழிப்பிட வசதி இப்படி எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் இப்பள்ளியை நேரில் ஆய்வு மேற்கொண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதோடு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடத்தை கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Updated On: 6 Sep 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!