10, 20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்போர் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

10, 20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்போர் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
X

மாவட்ட கலெக்டர் த.மோகன்.

விழுப்புரம் மாவட்டத்தில் 10,20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்களை மாவட்டத்தில் வாங்க மறுக்கப்படுவதாக தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்து வருகிறது,

இந்நிலையில் நாட்டில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வணிகர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் த.மோகன் கடுமையான எச்சரிக்கை விடுக்கும் அளவில் தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture