/* */

மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா
X

தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டமங்கலம், நாவல் மருதூர், ராம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நூறுநாள் வேலை கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்க சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் வந்தனர். அப்போது திடீரென நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி கௌரி உட்பட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 20 Jun 2022 5:00 PM GMT

Related News