Begin typing your search above and press return to search.
மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரிடம் போலீஸ் விசாரணை
Police News Today -விழுப்புரம் அருகே கிடாகத்தில் பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
HIGHLIGHTS
Police News Today -விழுப்புரம் அருகே உள்ள பிடாகத்தை சேர்ந்தவர் தேசிங்கு மகன் உதயகுமார் (வயது 20). இவர் 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயதுடைய மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, மாணவியிடம் உதயகுமார் தனது செல்போன் எண்ணை கொடுத்து பேசச்சொல்லி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி, தனது பெற்றோரிடம் கூறினார். உடனே அவர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் உதயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2