/* */

தலைவர்களின் உருவச்சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தலைவர்களின் உருவச்சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

தலைவர்களின் உருவச்சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
X

பைல் படம்

நாட்டில் தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரிய வேண்டும் என்பதே அதன் நோக்கம். அச்சிலைகளுக்கு எவரேனும் இழுக்கு ஏற்படுத்தினார்கள் என்றால் யாரும் பொறுத்துக் கொள்வது இல்லை. அதைத் தங்களது தலைவருக்கே ஏற்பட்ட அவமானமாகக் கருதி வெகுண்டு எழுகிறோம். அத்தகைய மனம்கொண்ட நாம், அந்தச் சிலைகளுக்கு இயற்கையில் ஏதேனும் பங்கம் வராமல் பார்த்துக் கொள்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் திருவள்ளுவர் சிலையும், 2 இடங்களில் பாரதிதாசன் சிலையும், ஒரு இடத்தில் ஜவஹர்லால் நேரு சிலையும், 14 இடங்களில் மகாத்மா காந்தி சிலையும், 72 இடங்களில் அம்பேத்கர் சிலையும், 11 இடங்களில் தந்தை பெரியார் சிலையும், ஒரு இடத்தில் இந்திராகாந்தி சிலையும், 3 இடங்களில் ராஜீவ்காந்தி சிலையும், 7 இடங்களில் காமராஜர் சிலையும், 27 இடங்களில் பேரறிஞர் அண்ணா சிலையும், 22 இடங்களில் எம்.ஜி.ஆர். சிலையும் அமைக்கபட்டுள்ளன.

இந்த தலைவர்களின் சிலைகளுக்கு ,பிறந்தநாள், நினைவு என ஆண்டுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே அழகுபடுத்தி, அலங்காரம் செய்து கொண்டா:டுவதோடு சரி. பின்னர் கண்டு கொள்வதில்லை. ஆண்டு முழுவதும் அந்த சிலைகளை காகங்களும், குருவிகளும் எச்சமிட்டு அலங்கோலபடுத்தி விடுகின்றன. தலைவர்களை கௌரவபடுத்த சிலை அமைக்கபட்டதின் நோக்கம் இங்கே அர்த்தமற்று வீணாக போவதை யாரும் உணரவில்லை.

பொது வாழ்க்கைக்கு தங்களை ஒப்படைத்து வாழ்ந்து மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் சிலைகள் வைப்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று யாரும் கருதக்கூடாது. தலைவர்களின் சிலைகளை தினந்தோறும் தூய்மை செய்து பராமரிக்க வேண்டும். அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் அவர்களது பிறந்தநாள், நினைவு நாளின்போது சிலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, வர்ணம் பூசவேண்டும். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களது கொள்கைகளை பரப்ப வேண்டும்.மேலும் சமூக விரோதிகளால் சிலைகள் சேதம் ஏற்பட்டு பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்கும் வகையில் சிலைகளுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என அந்த சிலைகளை தினந்தோறும் பார்த்து செல்லும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாட்டில் சிலை அமைக்கப்படுவதால் ஏற்படும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு தற்போதைய நிலையில் அரசு தலைவர்களின் சிலைகள் அமைப்பதற்கு அனுமதிகள் வழங்கப்படுவதில்லை அதனால் தான் சிலைகள் அமைக்கப்படுவது தற்போது குறைந்து போய் விட்டது.இது ஒரு வகையில் நல்ல முடிவாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு அரசு சார்பில் மரியாதை செய்வது பெருமைக்குரியது என்கின்றனர் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

Updated On: 22 Nov 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  2. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  3. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  6. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  10. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...