Begin typing your search above and press return to search.
விழுப்புத்தில் 412 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 412 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை 412 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 20,239 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை139 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
புதன்கிழமை மட்டும் 248 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 17,829 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 2482பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக இல்லாத அளவில் கடந்த ஏப்ரல் 21 ந்தேதியிலிருந்து மே.4 வரை கொரானா தொற்று வேகமெடுத்து 14 நாட்களில் சுமார் 3670 பேருக்கு கொரானா தொற்றும், சிகிச்சை பலனின்றி சுமார் 14 க்கும் மேற்பட்டோர் இறந்து உள்ளது மாவட்ட மக்களின் மனதில் ஒரு பீதியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.