விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
X
விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழுதரட்டி பகுதியைச் சார்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் நகராட்சி வழுதரெட்டி பகுதியில் பார்த்தீபன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த தெய்வகடாட்சம் மகன் வினித்குமார் (வயது 20) என்பதும், இவர் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வினித்குமாரை தாலுகா ஆய்வாளர் ஜெய்சங்கர் வசம் ஒப்படைத்தனர், போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture