/* */

விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழுதரட்டி பகுதியைச் சார்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
X

விழுப்புரம் நகராட்சி வழுதரெட்டி பகுதியில் பார்த்தீபன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த தெய்வகடாட்சம் மகன் வினித்குமார் (வயது 20) என்பதும், இவர் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வினித்குமாரை தாலுகா ஆய்வாளர் ஜெய்சங்கர் வசம் ஒப்படைத்தனர், போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 17 July 2022 2:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்