/* */

குலதெய்வம் கோயிலுக்கு சென்ற பெண் வேன் கவிழ்ந்ததில் உயிரிழப்பு

நாகப்பட்டினம் அருகே குலதெய்வம் கோயிலுக்கு சென்ற பெண் விக்கிரவாண்டி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குலதெய்வம் கோயிலுக்கு சென்ற பெண் வேன் கவிழ்ந்ததில் உயிரிழப்பு
X

பைல் படம்.

சென்னை பாடியை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ். இவர் உறவினர்கள் குழந்தைகள் உட்பட 19 பேருடன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மகழி கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் குலதெய்வ கோவிலுக்கு ஒரு வேன் மூலம் சென்று கொண்டிருந்தனர்.

வேனை முத்துசாமி என்பவர் ஓட்டி வந்தார், நேற்று இரவு விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலையில் வரும் போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த சுந்தரி . 48 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து விக்கிரவாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் அடிபட்டவர்களை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்,

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 14 Aug 2022 3:58 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  4. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  6. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  8. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  9. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  10. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு