/* */

விக்கிரவாண்டி பகுதியில் அரசு கலைக்கல்லூரி: சிபிஎம் கோரிக்கை

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கலைக்கல்லூரி வேண்டும் என சிபிஎம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.

HIGHLIGHTS

விக்கிரவாண்டி பகுதியில்  அரசு கலைக்கல்லூரி: சிபிஎம் கோரிக்கை
X

கஞ்சனூரில் நடைபெற்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி ஒன்றிய 23-வது மாநாடு 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி கிழக்கு, மேற்கு ஆகிய இரு ஒன்றிய 23-வது மாநாடு கஞ்சனூரில் நடைபெற்றது, மாநாட்டிற்கு எஸ்.ரமேஷ், ஜெயா ஆகியோர் தலைமை தாங்கினர், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆர்.தண்டபாணி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்,

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துகுமரன் ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு வி.கிருஷ்ணராஜ், மேற்கு ஆர்.டி.முருகன் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், உறுப்பினர்கள் ஏ.சங்கரன், ஏ.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சித்ரா ஆகியோர் உரையாற்றினர்

மாநாட்டில் விக்கிரவாண்டி பகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்க வேண்டும்,கல்வி கடன் வழங்க முகாம் நடத்த வேண்டும், அடிக்கடி விபத்து ஏற்படும் விக்கிரவாண்டி அண்ணா சிலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

தொடர்ந்து 9பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டு அதில் வி.கிருஷ்ணராஜ் ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

Updated On: 29 Nov 2021 2:56 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்