/* */

விக்கிரவாண்டி டோல்கேட்டில் கொரோனா உறுதி மொழி ஏற்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள டோல்கேட் பகுதியில் கலெக்டர் தலைமையில் கொரோனா உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

விக்கிரவாண்டி டோல்கேட்டில் கொரோனா உறுதி மொழி ஏற்பு
X

விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் கலெக்டர் மோகன் தலைமையில் கொரோனா உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் நெடுஞ்சாலை, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு உறுதி மொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு உறுதி எடுத்துக் கொண்டார், தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், சிவக்குமார், தாசில்தார் தமிழ்செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத், பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி, இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன், சுங்கச்சாவடி பொதுமேலாளர் முத்து அண்ணாமலை, மோட்டார் வாகன ஆய்வாளர் கோவிந்தராஜ், மாணிக்கம், ஜே.ஆர்.சி. மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை, இணை கன்வீனர் தமிழழகன், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர் பாபு உட்பட அனைத்து அரசு துறை அதிகாரிகள், பணியாளர்கள், சாரண சாரணியர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Aug 2021 3:41 PM GMT

Related News