கிளியனூர் நாற்றங்கால் பண்ணையில் ஆட்சியர் மோகன் ஆய்வு

கிளியனூர் நாற்றங்கால் பண்ணையில் ஆட்சியர் மோகன் ஆய்வு
X

கிளியனூர் நாற்றாங்கால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் நாற்றங்கால் பண்ணையில் ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கிளியனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.21.80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையினை மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai marketing future