Begin typing your search above and press return to search.
போலி ரெம்டெசிவர் பயன்படுத்திய மருத்துவமனைக்கு அபராதம்
திண்டிவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகளுக்கு போலி ரெம்டெசிவர் மருந்து செலுத்துவதாக புகார்
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இயங்கி வரும் ஐமேட் தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு போலி ரெம்டிசிவர் மருந்து பயன்படுத்துவதால் உயிர் இழப்பு ஏற்பட்டு வருவதாக புகார் சுகாதார துறை அமைச்சர் சுப்பரமணியனுக்கு சென்றது.
அதன்பேரில், சுகாதார இயக்குனர் தலைமையில் உடனடியாக அந்த மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தவறு கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
மேலும் குற்ற நடவடிக்கைக்கு மாவட்ட காவல்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவருகிறது.