/* */

தடுப்பூசி போட்டதால் பெண் இறந்ததாக கூறி சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தடுப்பூசி போட்டதால் பெண் மரணமடைந்ததாக கூறி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

தடுப்பூசி போட்டதால் பெண் இறந்ததாக கூறி சாலை மறியல்
X

செஞ்சி-சேத்துப்பட்டு சாலையில்  சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட மகாதேவிமங்கலம் அருகே மதுரா கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி விஜயா (37). இவர் புதன்கிழமை அதே பகுதியில் நடந்த நூறுநாள் வேலைக்கு சென்று உள்ளார். அங்கு அவருக்கு கொரொனா தடுப்பூசி போட்டு உள்ளனர், அப்போது அவருக்கு அங்கேயே லேசான உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது,

இதனை பொருட்படுத்தாமல் அவர் வீட்டிற்கு வந்து உள்ளார், இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு அதிகமானதால் உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்,.அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்,

இதனை அறிந்த அக்கிராம பொதுமக்கள் செஞ்சி-சேத்பட் சாலையில் சண்டி சாட்சி என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர், அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர்

Updated On: 2 Sep 2021 12:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்