/* */

அனுபவ பாத்தியதை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா

செஞ்சி பேரூராட்சி, தேசூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்

HIGHLIGHTS

அனுபவ பாத்தியதை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா
X

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு தர்ணாவில் ஈடுபட்டவர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி, தேசூர்பேட்டை பகுதியில் வசிப்பவர் முனுசாமி, இவர் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து திடீரென தனக்கு நியாயம் வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் செஞ்சி பேரூராட்சி எல்லையில் தேசூர்பேட்டை பகுதியில் அரசு புறம்போக்கில் காலகாலமாக கூரை வீடு கட்டி வசித்து வருவகிறேன், எனக்கு மாற்று இடம் கூட வழங்காமல் அந்த இடத்தில் இருந்து என்னை வெளியேற்றி, அந்த இடத்தை அனுபவ பாத்தியதை இல்லாத ஒரு தனி நபருக்கு வருவாய் துறை பட்டா வழங்கி உள்ளனர். அதனை ரத்து செய்து தனக்கு பட்டா வழங்க வேண்டும் என கூறினார்.

உடனடியாக அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்

Updated On: 13 Sep 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  2. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  5. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  10. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!