/* */

வேலூர்: பெண் வியாபாரி தாக்கியதாக தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்!

வேலூரில் பெண் வியாபாரி தாக்கியதாக கூறி தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வேலூர்: பெண் வியாபாரி தாக்கியதாக தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்!
X

வேலூரில் தூய்மைப்பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

வேலூர் மண்டித்தெரு , கிருபானந்தவாரியார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இன்று கொரோனா தடுப்பு விதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர் . அப்போது மண்டித்தெருவில் தள்ளுவண்டியில் வியாபாரிகள் பழம் விற்றுக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற சுகாதார ஆய்வாளர், நீங்கள் பழம் விற்பனை செய்வதற்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் விதிமீறி எதற்காக இங்கு விற்பனை செய்கிறீர்கள் . இதேபோல் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார் . பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார் . அங்கிருந்த பெண் பழவியாபாரி கீதா என்பவர் , மாநகராட்சி அதிகாரிகள் குறித்து திட்டிக்கொண்டிருந்தாராம் .

அப்போது அவ்வழியாக சென்ற தூய்மை பணியாளர் சாந்தகுமாரி என்பவர் எதற்காக திட்டுகிறீர்கள் அதிகாரிகள் கடமையை செய்கிறார்கள் எனக்கூறினாராம் . இதனால் ஆத்திரமடைந்த வியாபாரி கீதா, சாந்தகுமாரியை ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கினாராம் . இதில் சாந்தகுமாரி காயமடைந்தார் .

மேலும் அவர் மயங்கி விழுந்தார் . இது குறித்து தகவலறிந்த தூய்மை பணியாளர்கள்யாளர் 50 க்கும் மேற்பட்டோர் வியாபாரியை கண்டித்து , அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் , தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வேலூர் அண்ணா சாலை சாரதி மாளிகை எதிரே திடீர் மறியலில் ஈடுபட்டனர் .

தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர் . சம்பந்தப்பட்டவர்மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் . இதனை ஏற்றுக் கொண்ட தூய்மைபணியாளர்கள் மறியலைகைவிட்டனர் .

இதனால் அங்கு அரைமணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது . இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர் சாந்தகுமா ரி கொடுத்த புகாரின் பேரில் பெண் வியாபாரி கீதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

Updated On: 5 Jun 2021 3:21 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!