/* */

ஒடுகத்தூர் அருகே குருவராஜபாளையம் கிராமத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

ஒடுகத்தூர் அருகே குருவராஜபாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றை யானையின் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்

HIGHLIGHTS

ஒடுகத்தூர் அருகே குருவராஜபாளையம் கிராமத்தில் ஒற்றை யானை நடமாட்டம்
X

குருவராஜபாளையம் கிராமத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

வேலூர் அடுத்த ஒடுகத்தூர் அருகே ஒற்றை யானை நடமாட்டம் காணப்பட்டதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர் . வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வனச்சரகத்திற்குஉட்பட்ட பகுதியில் கருத்தமலை காப்புக்காடு உள்ளது . இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் வழியாக காட்டு யானைகள் வந்து , மலையடிவாரம் அருகே உள்ள விவசாய நிலங்களில் இருக்கும் வாழை , நெல் , கரும்பு , மா உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வந்தன . வனத்துறையினர் நடவடிக்கை காரணமாக யானைகள் வெளியிடங்களுக்கு விரட்டப்பட்டது . அதன்பிறகு யானைகள் நடமாட்டம் இல்லை .

இந்நிலையில் நேற்று மாலை குருவராஜபாளையம் அருகே உள்ள காட்டுக்கோயிலுக்கு செல்லும் பாதையில் ஒற்றை யானை ஒன்று வந்து கொண்டிருந்தது . இதைக்கண்ட கிராம மக்கள் பீதியடைந்து தப்பி ஓடினர் . மேலும் இளைஞர்கள் சிலர் சென்று யானையை விரட்ட முயன்றனர். இருப்பினும் ஒற்றை யானை நீண்ட நேரம் அங்கேயே இருந்தது . பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது .

இதுகுறித்து தகவலறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் நேற்றிரவு வந்து பார்வையிட்டனர். இருப்பினும் இன்று காலை வரை யானையின் நடமாட்டம் இல்லை. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் , சாணாங்குப்பம் காப்புக்காடு பகுதியில் வழி தவறி ஒற்றை யானை ஊருக்குள் வர முயன்றுள்ளது . கிராம மக்கள் விரட்டியதால் யானை திரும்பிச்சென்று விட்டது . இருப்பினும் யானை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம் . இந்த யானை வழிதவறி இப்பகுதிக்குள் வந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்தது என தெரிவித்தனர் .

பல ஆண்டுகளுக்கு பிறகு யானை ஊருக்குள் வர முயன்றதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர் .

Updated On: 14 July 2021 1:51 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  5. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  8. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  9. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  10. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி