/* */

வந்தவாசி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

வந்தவாசி அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வந்தவாசி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
X

குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசியை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் சத்யாநகர் பகுதி உள்ளது. அங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்தநிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து வந்தவாசி-திண்டிவனம் சாலையில் காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தங்கள் பகுதிக்கு சீராகக் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும், ஊராட்சி மன்ற தலைவரும், தங்களுக்கு சீராகக் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால், சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியலால் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Updated On: 20 April 2022 11:51 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  8. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  9. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  10. ஆன்மீகம்
    கரூர் மாரியம்மன் கோவிலில் துவங்கியது கம்பம் விடும் திருவிழா