/* */

பெரணமல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குறித்து பயிற்சி முகாம்

பெரணமல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர்கள், சமூக நிறுவன ஒருங்கிணைப்பு செய்தல் குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெரணமல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குறித்து பயிற்சி முகாம்
X

பயிற்சி முகாமின் போது பயிற்சி கையேடுகள் பேனா ஆகியவை வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஊராட்சி அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்களை ஒருங்கிணைப்பு செய்தல் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன் தலைமை தாங்கிய குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சந்தோஷ் குமார் வரவேற்றார்.

பயிற்சியில் ஊராட்சி அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்களை ஒருங்கிணைப்பு செய்தல் மற்றும் கிராம வளர்ச்சி குறித்து பயிற்சி அளிக்கப்-பட்டது. பயிற்சியை மாவட்ட பயிற்றுநர்கள் உமா ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

முகாமில் ஊராட்சி மன்ற தலைவர், கிராம கூட்டமைப்பு அளவிலான தலைவர், செயலாளர், பொருளாளர், கிராம வறுமை ஒழிப்பு செயலாளர், விவசாய உற்பத்தியாளர் கூட்டமைப்பு தலைவர், உற்பத்தி குழு சமூக வலை பயிற்றுநர் உள்பட 6 பேர் கொண்ட ஒரு குழுவாக அமைத்து இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் 11 குழுக்களாக ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சிகளில் உள்ள அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அனைவருக்கும் பயிற்சி கையேடுகள் பேனா ஆகியவை வழங்கப்பட்டது. முடிவில் உதவியாளர் லோகேஷ் நன்றி கூறினார்.

Updated On: 12 April 2022 11:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  2. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  3. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  4. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  7. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  8. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  9. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  10. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?