/* */

வந்தவாசி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

வந்தவாசி அருகே ஆந்திரவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

வந்தவாசி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்
X

கடத்தல் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு அரக்கோணம் வழியாக ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடமிருந்து ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. இதை தடுப்பதற்காக கூடுதலாக போலீசார் மற்றும் வருவாய் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான்பேட்டை பகுதியில் ரேசன் அரிசி மினி லாரியில் கடத்திச் செல்வதாக பறக்கும் படை தாசில்தார் இளஞ்செழியனுக்கு தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் சதீஷ், எஸ்.ஐ. மோகன், உதவியாளர் சுரேஷ் ஆகியோருடன் அந்தப் பகுதிக்கு சென்றார். அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய மினி லாரி அரிசி மூட்டைகளுடன் வேகமாக சென்றது. அந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். லாரியை சோதனையிட்டபோது 3.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. மினி லாரி மற்றும் அதிலிருந்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Jun 2022 1:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’