/* */

கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் 5 பேரை கைது செய்ய திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்தார்

HIGHLIGHTS

கொலை முயற்சியில் ஈடுபட்ட 5  பேர் குண்டர் சட்டத்தில் கைது
X

வந்தவாசி கோட்டைக்குள் தெருவைச் சேர்ந்த கிரி என்ற கிரிதரன் (வயது 26). அதே தெருவைச் சேர்ந்தவர் முகமதுசிப் (24). விழுதுபட்டு கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன் (21). செய்யாறு தாலுகா தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்நிலவன் என்ற அகஸ்தியன் (21). செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா மானாமதி கிராமத்தைச் சேர்ந்த ரிஷிநாத் (19) ஆகிய 5 பேரும் முன்விரோதம் காரணமாக செய்யாறு தாலுகா மேல்மா கிராமத்தைச் சேர்ந்த ஓசூரான் (21) என்பவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி அவரையும், மனைவி ஹேமாவதியையும் கொலை செய்ய முயன்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வந்தவாசி வடக்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வந்தவாசி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மேற்கண்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

5 பேரும் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கத்தில் எஸ்பி பவன்குமார், அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க பரிந்துரை செய்தார். மாவட்ட கலெக்டர் முருகேஷ் மேற்கண்ட 5 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Updated On: 23 Dec 2021 7:01 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  2. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  5. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  6. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  7. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  8. மாதவரம்
    சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி