/* */

வந்தவாசி: மூதாட்டியிடம் நகை பறித்த கணவன், மனைவி கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே, மூதாட்டியிடம் நகை பறித்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

வந்தவாசி: மூதாட்டியிடம் நகை பறித்த கணவன், மனைவி கைது
X

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, இரட்டை வாடைசெட்டி தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 66). இவர் தனது வீட்டின் எதிரே நிறுத்தி இருந்த மொபட்டை காணவில்லை என போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், மும்முனி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ராணி (60) என்பவர், அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்தவாசி கோட்டை மூலைப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது மொபட்டில் வந்த அம்மணம்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (40), அவரது மனைவி பானுபிரியா (28) ஆகிய இருவரும், ராணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத சேதராகுப்பம் சாலைக்கு அழைத்துச் சென்று, அவர் காதில் அணிந்திருந்த கம்மல், மற்றும் மாட்டலை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து, வந்தவாசி போலீசில் ராணி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் மற்றும் பானுபிரியாவை கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் பெருமாள் என்பவருடைய மொபட்டை திருடியதும் தெரிய வந்தது.

Updated On: 8 Sep 2021 7:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது