மதுக்கடைகளுக்கு 3 நாள் விடுமுறை: மீறி விற்றால் நடவடிக்கையென எச்சரிக்கை

X
By - S.R.V.Bala Reporter |13 Jan 2022 12:01 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில், மது கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை; மீறி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில், திருவள்ளுவர் தினமான ஜனவரி 15ஆம் தேதி, வடலூர் ராமலிங்க நகர் நினைவு தினமான ஜனவரி 18ஆம் தேதி, குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி, ஆகிய மூன்று நாட்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கட்டுப்பாட்டில் இயங்கிவரும் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும், மது கூடங்களில் மதுபானம் விற்பனை நடைபெறாமல் மூடி வைக்கப்படும். மீறி மது விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் எச்சரித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu