/* */

திருவண்ணாமலை: தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின ஊர்வலம், நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின ஊர்வலம்
X

தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின ஊர்வலம், நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் நேற்று மாலை திருவண்ணாமலையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாநில தொ.மு.ச. பேரவை செயலாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சில் துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் மணிவண்ணன், துணை செயலாளர் நாராயணன், குணசேகரன், மாவட்ட தலைவர் துரைசாமி, பொருளாளர் மோகனரங்கன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அனைத்து அமைப்புசாரா தொ.மு.ச. செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம் வரவேற்றார்.

காமராஜர் சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் திருமஞ்சன கோபுர வீதி, கற்பகவிநாயகர் கோவில் திருவூடல் தெரு, பெரியக்கடை வீதி, தேரடி வீதி வழியாக காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது. இதில் நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் கலந்து கொண்டு பேசினார்.

ஊர்வலத்தில் மாவட்ட அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, மின் வாரிய திட்ட செயலாளர் சரவணன் உள்பட மாவட்ட துணை அமைப்பாளர்கள், தொ.மு.ச. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பு சாரா துணை செயலாளரும், நகரமன்ற உறுப்பினருமான மெட்ராஸ் கே.சுப்பிரமணி நன்றி கூறினார்.

Updated On: 2 May 2022 1:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு